×

திருப்பதியில் வைகுண்ட வாசல் தரிசனம் இரண்டு நாள் மட்டுமே

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று விசாகா சாரதா பீடாதிபதி சொரூபானந்த சுவாமி, சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயிலில் இதுவரை வைகானச ஆகம முறைப்படி அனைத்தும் பூஜைகளும் செய்யப்பட்டு வந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி, துவாதசிக்காக திடீரென 10 நாள் வைகுண்ட வாசலை திறப்பது என்று மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்தார். இதையடுத்து ஏழுமலையான் கோயிலில் வருகிற 6, 7ம் தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


Tags : Vaikuntha ,Tirupati , Tirupati, Vaikuntam, Darshan
× RELATED திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதப் பெருமாள்